தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
வெப்ப சலனம் காரணமாக சாத்தூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்சமாக 1ல் இருந்து 3 டிகிரி அளவுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
இரவு நேரத்தில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார்.
கடல்காற்று தாமதமாக வீசுவதாலும், மேற்கிலிருந்து தரைக்காற்று வலுவாக வீசுவதாலும் வெப்பம் அதிகரிக்கும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும்.
No comments:
Post a Comment