Friday 27 May 2016

மேற்கு வங்க முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து 2-வது முறையாக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு, மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாதி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவருடன், 41 அமைச்சர்களுக்கும் மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாதி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாக நடந்த தேர்தலில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 211 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சவுரவ் கங்குலி  உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்று விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment