Tuesday 24 May 2016

சாதனை படைத்துள்ள 4 வயது குழந்தை

நாக்பூரில் 4 வயது குழந்தை 2 தேசிய விருதை பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயண வித்தியாலயத்தில் 'ஆன் ஸ்போட் அட்சுடிகேஷன்' போட்டியை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட வராட் மல்காண்டாலே என்னும் 4 வயது சிறுவன் கலந்து கொண்டார். 60 வினாடிகளில் 51 வார்த்தைகளின் உச்சரிப்பை சரியாக சொல்லி சாதனை படைத்துள்ளார். மேலும் 100ல் இருந்து பூச்சியம் வரை பின்னோக்கி எண்ணுவதை 70 நொடிகளில் முடித்து மற்றொரு சாதனை படைத்துள்ளார். 

இவருக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது முதல் வாய்ப்பில் ஒரு நிமிடத்திற்கு 41 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். பின்னர் இரண்டாவது வாய்ப்பில் ஒரு நிமிடத்தில் 51 வார்த்தைகளை உச்சரித்து சாதனை படைத்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நிமிடத்தில் 51 வகை கார்களை விளக்கியுள்ளார். மேலும் 1 நிமிடம் 17 நொடிகளில் 55 கார்களை விளக்கியுள்ளார். இளம் வயதில் தற்போது படைத்துள்ள சாதனைகள் சேர்த்து 3 சாதனைகளை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment